Wednesday, September 17, 2014

கல்யாணம்ம் சுவாஹா

#கல்யாணம்ம் சுவாஹா  

“வா.. சத்யா “

“நேத்தியே வந்துருக்கலாமே....”

“அப்படிலாம் இல்ல.. கொஞ்சம் உடம்பு சரி இல்ல..”

“சாப்ட்டு வந்துருங்க”

“என்னடா? சரி வா”

“ஸ்வீட் இருக்கு பாருயா.. அல்வா.. கவனிக்கலையோ! ஹீ ஹீ...”

“’பூரி’ய பாத்தாலே பயமா இருக்குடா”

“என்னையா மண்டபத்துல ஒரு பொண்ணும் காணும்”

“காபி ரொம்ப இனுப்பா இருக்குல?”

“அங்க பாரு கல்யாண பொண்ணு பக்கத்துல.. யாரு அது... செம சீன் போட்றா”

“கல்யாணம் மண்டபத்துல இல்லையாம் பக்கத்துல கோவில்லயாம், அதான்... நாமலும் போவோமா?”

“பின்னன இங்க இருந்து என்ன பண்றது!.. அந்த சீன் பார்ட்டியும் போயிடிச்சே!”

“அழகா இருக்கா...டா! ஹீஹீ... சீன்ன்... போட்றா”

“இந்த கோவில்ல தான்யா நானும் என் லவரும் பிரஸ்ட் மீட்டிங் அப்டியே கோவிலைய சுத்தி.. பொறுமையா @#$%”
“ஹலோ பாஸ்... எப்படி இருக்கீங்க.. யாரு வீடு?”

“கல்யாண பொண்ணு என்னோட பிரண்ட்டு..ஆமா..”

“என்னையா இவ்ளோ பார்மாலிட்டிஸ்.. வீட்ல 300 வாதான் வைக்க சொன்னங்க நானாதான் அதான் இப்படி பயமுறுத்துறாங்களேயா.. எல்லாம் ஒரு பார்மாலிட்டி”

“எங்க மறந்ஜாலும் ஹாலஜன மூஞ்சில அடிக்கிறான்.. டிவில பாரேன் எல்லாரு மூஞ்சும் எரியுது.. ஓவர் எச்போஸ்.. அது என்னங்க சொல்வாங்க?”

“பர்ன் அவுட்..”
“எல்லாம் ஆட்டோல போட்டு ஏனோதானோனு சூட் பண்றாங்க”

“என்னையா இது வாசலுக்கு மாப்ளைய கூட்டி போறாங்க.. திரும்பி வராங்க என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியலையே”

“எல்லாம் எடிட்டர் கைல தான் இருக்கு.. சினிமா மாதிரி.. ஹா ஹா..”

“யெப்பா! கல்யாணம் முடிஞ்சிடிச்சி..”

“நீங்க கிபிட் குடுத்துட்டு வந்துடுங்க.. கிளம்புவோம்”

“சீஸ்”

“எங்கடா அந்த சீன் பார்ட்டி?”

* * * * * *
“காலேல நாங்க ரெண்டு பேரும் ஒரு கல்யாணம் போனோம்.. பொண்ணு இவர் பிரெண்ட்... பொண்ணோட தம்பி என் பிரெண்ட்”

“நான் ஒரு கல்யாணத்துக்கு போட்டோகிராபி பண்ண போனேன்.. வடபழனி முருகன் கோவில் பக்கத்துல ரிஜிஸ்டர் பண்றாங்க.. சிம்பிள் பார்மளிட்டி.. ரெண்டு வீட்டு குடும்பம் மாட்டும் தான்.. நான் நின்னு போட்டோ எடுக்கவே எடம் இல்ல.. அவ்ளோ சின்ன ஆபிஸ், அப்புறம் பக்கத்துலயே.. பெரிய ஹோட்டல் ஒன்னு அது... பேரு..., செமையா ரிசப்சன் டின்னர்... அவ்ளோதான்.. எனக்கு ஆயரம் ரூபா வந்துச்சு டின்னெர் வெஜ், நான்வெஜ்னு சூப்பரா இருந்துச்சு”

“ஆமா பொண்ணுக்கு பொதுவா 21 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கலாம்ல..”

“மேக்சிமம் பொண்ணு பய்யன் ரெண்டு பேருக்குமே 25 லேந்து 27 குள்ள பண்றது தான் நல்லது”

“அப்புறம் உடனே குழந்த வேறயா?”

“அட்லீஸ் 2 வருசமாது தள்ளிதான் பெத்துகணும்.. “

“யோவ்.. நீ வேற 2 வருசமா பாக்றவன்லாம் எதாச்சு கேள்வி கேட்றுவானுங்கயா.. அதுக்கு 30ல பண்ணிக்கிறதே பெட்டெர்”

“கப்புள்ஸ் ப்ரீயா லவ் பண்ண ரெண்டு வருஷம் வேணாமா?.. பதினாலு வயசுல ஜெனிடல் ஆகி 27 வயசு வர வெயிட் பண்றதே மனுஷனுக்கு ஓவர் டா”

“நானே இன்னும் கல்யாணம் பத்தி யோசிக்கல.. என் தம்பி சொல்றான்.. மல உச்சில ஓபன் ஷ்பேஸ்ல தான் கல்யாணம் பண்ணுவானாம்”

“தெரியுமா ரசூல்க்கு கல்யாணம் பண்ண மறுபடியும் பொண்ணு பாத்தாச்சு”

“இத கேளு.. பொண்ணு டென்த்தான் படிக்குதாம்”
“ஐயோ என்னடா இது அநியாயம் பாவம்யா..”

“யோவ் அது மட்டும் இல்லையா.. சின்ன சண்டனாலே அம்மாவ பாக்க போய்டும் பக்குவம் இருக்காது யா?”

“இது வன்கொடுமை மாதிரி தான்..இல்ல?”

“அப்படியே படிக்க வச்சாலும் பத்தாதுலயே லவ் பண்ணி ஊர சுத்துறாங்க அதுக்கு என்ன பண்றது?”

“பிரெச்சன அது இல்ல.. படிக்கிற பொண்ணுங்களும் சொசைட்டிய விட்டு விலகிதான் இருக்காங்க அதுக்கு என்ன பண்றது?”

“சுதந்திரம் எந்த ஒரு பெண்ணும் ரோட்டோர டீ கடையில தனியா நின்னு டீ குடிக்க வைக்க கூடியதா இருக்கணும்.. காதலனோட இருட்டுல ஒதுங்குறதுக்கு மட்டும்தான் சுதந்திரமா? இதுலதான ஆபத்து”

“இதுல.. ஒரு பொண்ணு தன்னோட ஆண் வட்டத்துல பெண்கள பத்தி அவங்களோட  பொதுவான எண்ணம் என்ன(?)ன்னு தெரிஞ்சிக்கல பாக்கணும்”

“யோவ்.. ஆண்தான் மூல காரணமே... சும்மா @#$%”

“ஆண்களுக்கு ஏத்த மாதிரி அமைச்சதுதான் இந்த சொசைட்டி அதான் இவ்ளோ பிரெச்சனையும் என்ன?...”

“இந்த பொண்ணுக்கு முன்னாடியே ஒரு பொண்ணு பாத்தாங்க.. அதான்யா அவனுக்குதான்.. வெளிய சொல்லவே ஒரு மாதிரி இருக்கும்”

“எனக்கு தெரியும் நானும் கேள்விபட்டேன்.. ஹாஜா சொன்னான்... ஹாஜாவுக்கு இதுல பயங்கர கடுப்பு ஆனா சொல்லி சிரிச்சான்”

“நீ சொல்லு எனக்கு தெரியாது”

“பொண்ணு ஏழோ எட்டோதான் படிச்சிருக்கு.. கல்யாணம் வேலைலாம் ஆரம்பிச்சிடிச்சு.. அப்புறம் அந்த பொண்ண வேணாம்னு சொல்டாங்க.. ஏன் தெரியுமா? அந்த பொண்ண ஒரு நாள் இவங்க வீட்ல தங்கவச்சிருக்காங்க.. அப்போ அந்த பொண்ணு தூக்கத்துலயே பெட்ல மூத்தரம் பேஞ்சிடிச்சி.. அப்புறம் எல்லாரும் அசிங்கமா பேசி சண்ட வந்து கல்யாணத்த நிறுத்திடாங்க”

“அடடா! இது செம ட்ரிக்கா இருக்கே..”

“அந்த பொண்ண வேணாம்னு சொல்லிட்டு இப்போ மறுபடியும் பத்தாது படிக்க போற  பொண்ண பேசி வச்சுருக்கானுங்கயா... இவனுங்கள என்ன சொல்றது”  

Gt sathya

Saturday, July 12, 2014

KVK


காதலை வேண்டி கரைகின்றேன்

வர்நிகாஅழகான பெயர் என்று நீ சொன்னபோது அதை நான் ஏற்றுக்கொண்டு சிறு புன்னகை செய்வேன். எனக்கோ அந்த பெயர் அரவே பிடிக்கவில்லை என்பதுதான் நிஜம். இருந்தும் இதுவரை யாரிடமும் வெளிபடுத்தியது கிடையாது. உன்னிடமும் தான் அகிலன். உன்னுடனான சம்பவங்களும் உன்னிடம் நான் சொல்லாத விசயங்களும் இந்த கதையில் நீ படிக்கலாம். அகிலன் நீ இலக்கியம் வாசிப்பவன் என்பது எனக்கு தெரியும். என் நினைவு தெரிந்த நிலையிலிருந்து வெறுத்துப்போன வாழ்க்கையில் பெயரும் இருப்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். என் பெயர் எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் எனது அம்மாவை பிடிக்காமல் போனது தான். அவள் எனக்கு இட்ட பெயர்தான் வர்நிகா. என் அம்மா என்னிடம் அவ்வப்போது வந்து நேசமாக நடந்துக்கொள்ளும் போதெல்லாம். அது வெறும் நாடகம் என்கிற எண்ணமே என் மனசுக்குள் ஓடியது. என் அப்பாவின் இறப்பிற்கு பின்னும் நான் அவரை... அவரை மட்டுமே நேசித்திருந்தேன். என் அம்மாவை விட்டு ஒதுங்கி என் சித்தப்பாவின் வீட்டில் அப்போது இருந்தேன். நமது ஆரம்ப பழக்கத்திலேயே இவையெல்லாம் நீ அறிந்த விசயம்தான். என் சித்தப்பாவின் குடும்பமாக சித்தி மற்றும் சித்தப்பாவின் ஒரே மகனான விவேக் மற்றும் நானும் ஒரே வீட்டில் வசித்தபோதும் அவர்களுடனும் என்னால் இயல்பான உறவில் இனைந்து வாழமுடியவில்லை. எனக்கும் என் அப்பாவிற்குமான உறவை போல் பிணைப்பு வேருயாருடனும் எனக்கு ஏற்படவில்லை. எனக்கென்ற தனியறை. கல்லூரிக்கு செல்வதும் வருவதுமாக இருப்பேன். கல்லூரியிலும் நான்யாருடனும் நெருங்கி பழகுவதில்லை கீதா அடிக்கடி சொல்வாள். கீதா எனக்கு நேர்மாறானவள், எப்போதும் அவள் முகத்தில் புன்னகை இருக்கும். அவளது அந்த புன்னகையே எனக்கு ஒருவித ஆறுதலாய் தோன்றும். அவளுடன் சகஜமாக பழகும் ஆண் நண்பர்கள் நிறைய இருந்தனர். ஆனால் நான் எந்த ஆண்களுடனும் நட்பு கொண்டிருக்கவில்லை. ராஜேஷை சந்திக்கும் வரை. கீதா ஆண்களை பற்றியும், காதலை பற்றியும் தான் பெரும்பாலும் பேசிக்கொண்டிருப்பாள். பெண்கள் திருமணம் முடிந்து கணவனுடன் சென்றவுடன். என்னவெல்லாம் செய்து கணவனை கைக்குள் வைக்கவேண்டும் என்று தனி வகுப்புதான் நடத்துவாள். “பக்கத்து எதிர் வீட்ல வயசு பொண்ணுங்க, யாரும் ‘விடோ’ இருந்தால் ஜாக்ரதையாக இருக்கனும் இல்லேன்னா உன்னவிட்டு ஓடிபோய்டுவான்” என்று சொல்லி சத்தமாக சிரிப்பாள்.

ராஜேஷ்அப்போது எனக்கு சீனியராக எம். ஏ. ஹிஸ்டரி முதலாம் ஆண்டு படித்துகொண்டிருந்தான் கல்லூரிக்குள் எழும் பல சண்டைகளுக்கு காரணகர்தாவாக இருப்பது அவனே, அவன் மீது எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் ஏற்படவில்லை... என்றபோதும் ஏதோ ஒருவித பரிவு. ஏதோ ஒரு நாள் கல்லூரியிலிருந்து பேருந்து நிலையத்தில் “இப்போ என்ன லவ் பண்ணபோறியா இல்ல இந்த பஸ்ஸுக்கு முன்னாடி விழுந்து உன் கண்முன்னாடியே சாகட்டுமா?” என்று மிரட்டி விழச்சென்றுவிட்டான். கீதாவிற்கு எங்கள் காதலில் விருப்பம்மில்லை. எனக்கு ஏனோகாதலும் கசந்தது அகிலன். உன்னுடன் நான் இருந்த பல சமயம் அழுதிருப்பேன் எந்த சந்தோசமும் உனக்கில்லை மன்னித்துவிடு அகிலன்.

பின் என் வாழ்வின் நான் மிகவும் முன்னுரிமை கொடுத்து... அன்பு செலுத்தி வளர்த்த நாய் ப்ரௌனி. விவேக் பள்ளியில் படித்து கொண்டிருந்த சமயம் அதை எடுத்து வந்தான். எனக்கு தெரிந்த வரையில் அவன் அந்த நாய்க்குட்டிக்காக பன்னிரெண்டு ரூபாய் குடுத்திருக்கிறான் என்பது மட்டுமே. அது சாக்லேட் நிறம்மற்றும் வெள்ளை கலந்து அழுகுடனே இருந்தது அதனால் ப்ரௌனி என்று பெயர் வைத்தேன். விவேக் பள்ளி முடித்து கல்லூரிக்கு செல்வதற்கு முன்பே பிரௌனியிடமிருந்து விலகியே நடந்துகொண்டான். ப்ரௌனி மிகவும் நேசமாய் இருந்தது என்னுடன் மட்டும்தான். என் அறையில் என்னுடன்தான் எப்போதும் இருக்கும். கல்லூரியிலிருந்து நான் வரும் நேரம் அறிந்து தினம்எனக்காக வாயிலில் அமர்ந்தபடி காத்துகொண்டிருக்கும், கண்டவுடன் வாலினை அசைத்து குதித்து முகத்தை எச்சில் படுத்திவிட்டுத்தான் ஆசுவாசம் அடையும். சிரிப்புதான்... இரவில் என்னுடன் படுத்து உறங்கும். நான் என் வொவ்வொரு நாளினையும் அதற்காக கொஞ்சம் செலவிட்டேன். ப்ரௌனி எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது உண்மை. அதற்கு தினம் இரண்டு வேளை பால் மற்றும் உணவாக பிஸ்கட்டுகள் தருவேன், வீட்டில் அசைவஉணவு சமைக்கும் வேளைகளில் அது சமையலறை விட்டு நகராது. சித்தி அதற்கு குறைந்த அளவில்தான் மாமிசம் வைப்பாள். என் அறையில் அதற்கு என் உணவு மாமிசத்தையும் பாதிக்குமேல் தந்துவிடுவேன். விடுமுறை நாட்களில் ப்ரௌனியுடன் ஏதாவது மனதிற்கு வந்தபடி பேசிகொண்டிருப்பேன். ப்ரௌனி என் வார்த்தைகளை புரிந்து கொள்ளும்... என்று நம்பினேன். அந்நாட்களில் இரண்டுமுறை ப்ரௌனியை வீதிகளில் கூட்டி செல்வேன், சற்று தொலைவில் இருக்கும் நீரோடை வரை கூட்டிசென்று நீரை அதன் மேல் தெளித்து விளையாடுவேன்... அது உடலை சிலிர்பி கொள்ளும். எல்லா நாய்களுக்கும் நீச்சல் தெரியுமா? என்பதில் எனக்கு ஒருவித சந்தேகம் இருந்தது.
நான் ஒன்றும் எழுத்தாளர் இல்லை. வளவள என்று எழுதிவிட்டேனா அகிலன்? உன்னுடன் இருந்த நாட்களில் நீ புத்தகம் படிப்பேனா என்று கேட்டிருக்கிறாய். “பாரதியை படித்திருக்கிறாயா?” என்பாய் “’படி” என்பாய். ஆனால் திடீரென எழுத தூண்டியது உனது நினைவுகள்தான் அகிலன். உன்னைபற்றிய நினைவுகள் இப்போதெல்லாம் அடிக்கடி ஏற்படுகிறது.நினைவில் வருவது... வழக்கத்திற்கு மாறாக அப்போது தினம்தோறும் ஐஸ்கிரீம் சாப்பிடும் ஒருவித அகச்சூழலில் இருந்தேன். நீ அப்போது என்னை மொபைலில் அழைத்தாய். காத்திருந்தேன். நீ தூரத்தில் வருவது அறிந்த போதே என்னுள் புதிதாய் உணர்ந்தேன். உன்னை முதல் முறை சந்தித்ததை காட்டிலும் மேலான... “இப்போ எப்படி இருக்கீங்க வர்நிகா? “கீதாகிட்ட தான் உங்க நம்பர் வாங்குனேன். உங்க முகம் இப்பவும் கவலையில்தான் இருக்கு. என்னை பாருங்கள். என்னை போல இருங்க” என்று சிரித்து கொண்டாய். எனக்கு உன் கண்கள் இப்போதும் வியப்பை தருகிறது... குழந்தைகளின் கண்களை போல. பின் உனது குரல் அதுஒரு பெண் ஆணின் குரலில் எதிர்பார்க்கும்அன்பு நிறைந்திருக்கும் குரல்.

அன்று கீதா சொன்னவுடன்லாவகமாய் கத்தரித்த முடியுடன், முகத்திற்கு அளவான தாடி மீசையுடன் குழந்தை குணம் குறையாத கண்களுடன் இருந்த உன்னை முதன் முதலில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. கீதா சொன்ன பெயர் நீயாகதான் இருப்பாய். “ஆமாம்..நீங்க?” “நான் வர்நிகா, கீதா பிரெண்ட். அவ வர கொஞ்சம் லேட் ஆகுமாம், உங்கள என் வீட்டுக்கு அழச்சிக்க சொன்னா. அதான் வீடு. அவ ஆன் தி வே...” நீ வீட்டிற்குள் நுழைந்தவுடனே யார் புதிதாய் வந்தாலும் குறைக்கும் ப்ரௌனி உன்னை கண்டவுடன்  வாலினை அசைந்து கொடுத்து உன் கைகளை நக்கியது. “இது கடிக்குமா?” என்றாய் தடவிகொடுத்தபடி. சித்தி என்ன நினைத்திருப்பாள். நீ என் ப்ரௌனியுடன் மிகநெருக்கமாகிவிட்டாய், அது வால் அசைப்பதை நிறுத்தவில்லை. “நாய் குட்டிங்க எதையுமே எதிர்பார்க்காம அன்பு செலுத்துதில்ல? இது பேர் என்ன?” இரண்டு முறை பெயர்சொல்லி அழைத்து சிரித்துகொண்டாய், பொலிவான உன் முகத்தில் ஏற்பட்ட புன்னகை... மறக்க முடியாதது.

கல்லூரியிலிருந்து மாலை வரும்வழியில் இரண்டு தெருநாய்களுக்கு ‘பிஸ்கட்’ வாங்கி உடைத்து போட்டேன்.. சாலையில் அழுதுவிட கூடாது என்றெண்ணி நடந்து வந்தேன். சாலையின் ஓர டீ கடை ஒன்றில் நீ யாரோ ஒரு ஆணுடன் பேசிகொண்டிருந்தாய். ஆனால் நான் உன்னிடம் அதை சொல்லவேண்டும். “ஹலோ வர்நிகா.. எப்படி இருக்கீங்க? பாத்திங்களா? உங்கபெயர மறக்கல...” சிரித்தாய். “என்னாச்சு?” நான் உன்னிடம் ப்ரௌனி இறந்து விட்டதாய் கூறி அழுதேன். என்னுடைய ஒரே ஆன்ம உறவு. அன்று என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தாய் நான் அழுதபடியே இருந்தேன்... கண்ணீரினை கைகளை கொண்டு துடைத்தபடியே இருந்தேன்...இப்பொது அதை எழுதுகையில் கூட எனக்கு அழுகை வருகிறது அகிலன். நீ அன்று எதுவுமே பேசவில்லை என்னை பார்த்தபடியே இருந்தாய். மனம்  நிலைகொள்ளவில்லை அதிகமாக ஐஸ்கிரீம் சப்பிட்டுகொண்டிருந்தேன் அப்போது.என் நிலைபுரிந்து, நீ மூன்றாம் முறையாக வந்தாய் இதுவரை அனுபவபடாத ஒன்றில் மனதை செலுத்த சொன்னாய்.ஆல் இந்தியன்ஸ் வுமன்ஸ் ஹெல்ப் லைன் என்று நம்பர் ஒன்றை குறித்துக்கொள்ள சொன்னாய். இதுவரை அனுபவபடாத ஒன்று... என் அப்பாவிற்கு பிறகு முதன்முறையாக உன்னுடன் தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். “என்ன செய்கிறேன் என்றால்?” “படிப்பேன் ஆனால் உன்னைப்போல காலேஜில்இல்ல” நீ எதுவும் என்னிடம் சொல்ல விரும்பவில்லை. உனக்கு காபி குடிக்க பிடிக்கும்.மறுநாள் கல்லூரி முடிந்ததும் நான் உனக்கு மெஸ்சேஜ் செய்தேன்  “ஐ வான்ட் டு ட்ரின்க் எ காபிவித் யு அகிலா J”.
வாரத்தில் ஒருமுறை அப்பாவுடன் ஒரு நாள் முழுவதும் இருப்பேன். அப்போது அவர் அந்த சாக்லேட்டுடன் வெண்மைநிறத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் ஒன்றை எனக்கு வாங்கி தந்து அவரும் ஒன்று சாப்பிடுவார். அப்போதெல்லாம் அவர் சொல்லும் ஓர் வார்த்தை அந்த ஐஸ்கிரீமை அவர் தன் தனிமைக்கு மருந்து என்பார். இந்த ஐஸ்கிரீம்மினை என்னுடன் சாப்பிடவே வாரம்முழுவதும் தான் காத்திருப்பதாக சொல்வார். இதை என் சிறுவயதில் ஏற்பட்ட எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸின் பாதிப்பு என்றாய். முதன் முதலாக உன் தோளில் சாய்ந்து அழுதேன். ஐஸ்கிரீம்களை சாப்பிடும் பழக்கம் எனக்கு அப்போதிலிருந்து நின்றுபோனது ஒருவித அதிசயம் தான். கீதாவை போல என் வாழ்விலும் புன்னகைகள் மலர தொடங்கிருந்தது, ராஜேஷினை பற்றிய நினைவுகளும் இல்லை. உன்னுடன்னான உறவு எப்படி தொடர்ந்து கொண்டிருந்தது என்ற நினைவுகளும் தற்போது இல்லை. உன்னை சந்திக்கவேண்டும் உன்னுடன் ஒவ்வொரு நாளின் சிறுபொழுதேனும் கழிக்கவேண்டும். அகிலன். உனக்கு புடிச்ச ஹீரோ லகான்.

யாரு?.

வர்நி.. நீ என்ன தினமும் கூப்பிடற.. நாம கைகோத்துகுறோம்.. நீ என் தோள்ல சாஞ்சி அழுகுற.. என்னவிட்டு பிரிஞ்சி இருக்கமுடியலனு சொல்ற புரியுதா? நீ கண்டிப்பாக சகித்துக்கொண்டுதான் இருந்திருப்பாய் அகிலன். “உங்க அம்மா மேல உனக்கு கோவம் வேண்டாம் வர்னி.. அது அவங்க வாழ்க்கை...முடிவு” நான் இப்போது அம்மாவுடன் இருக்கிறேன். அம்மா என்னிடம் அன்பாக இருக்கிறாள். உன்னை தொடர்புகொள்ள விரும்பி உன் நம்பரினை அழைத்தேன் நீண்ட நாட்களாக ‘சுவிட்ச் ஆப்’ல் உள்ளது. கீதாவை அழைத்தேன். “ஏன்?” அவளது அண்ணன் ஹெராயின் பழக்கத்தில் அடிமை பட்டுகிடந்த போது ஹெல்ப் லைன் நம்பரில் கவுன்சிலிங் செய்ய நீ வந்தாய் என்றாள். என்னிடம் இருந்த உனது மொபைலின் அதே நம்பரை சொன்னாள், மேலும்இப்படி பட்டவர்களின் பெயர் உண்மையாக இருக்குமா என்றுகூட சொல்ல முடியாது. அப்படியா அகிலன்?... அகிலன்... அகிலன்...நீ என் அகிலன். அம்மா என்னிடம் ஒருநாள் கைபிடித்து மன்னிப்பு கேட்டு அழுதாள், மன்னித்துவிட்டேன். என்னிடம் யாரையேனும் விரும்புகிறாயா சொல்? என்றாள். அகிலன்  இதுவரை நீ என்னை தொடர்புகொள்ளவில்லையே ஏன்?

அன்று நீ வர்நி... இன்னைக்கு சொல்லிடறேன் நான் உன்ன காதலிக்கிறேன்.. நாம சேர்ந்து வாழணும்னு ஆசபட்றேன்” என் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தாய். நான் உன் வார்த்தைகளை ஏற்றுகொள்ளமுடியாமல் மௌனமாக அழுதேன், கண்டிப்பாக என் அழுகை உனக்கு அலுத்துத்தான் போயிருக்கும். ஏதோ ஒன்றை உனக்குள் முடிவெடுத்தவனாய் அன்று கோபத்தோடும் வெறுப்போடும் நீ அங்கிருந்து சென்றாய்.

நீ என் பார்வைக்கு தூரமாகி... புள்ளியாகி மறையும்வரை நான் அந்த சாலையினையே பார்த்துகொண்டிருந்தேன்.

எழுத்து
G.T. சத்யா



























































Monday, May 12, 2014

டெமோ

#டெமோகுறுங்கதை

ஒரு திரைபடத்திற்கான திரைகதை எழுதியபின்பு முதலில் என்ன செய்யலாம் என்று யோசித்து திரைகதையிலிருந்து ஒரு காட்சியை(எளிமையாக எடுக்க கூடிய) எடுத்து கொண்டு ஒரே நாளில் அதனை படமாக்கி மேற்படி வேலைகள் செய்தால் தயாரிப்பாளரிடமும் கதாநாயகர்களிடமும் காண்பிக்கலாம் வசதியாக இருக்கும் என்றபடி டெமோ ஒன்றை எடுக்க திட்டமிட்டேன். திரைகதையை ஊரில் இருந்தபடி எழுதிய போதே கதையை கேட்ட கொஞ்சம் பழக்கம் உள்ள இரு நண்பர்கள் பிரதாபும் தினேஸும் கதை பிடித்திருப்பதாக என்னுடன் பணியாற்ற விரும்புவதாக கூறி என்னுடனே சென்னை வர முடிவெடுத்து ஒரு சமயத்தில் வந்தே விட்டோம். அசோக்பில்லரில் பிரதாப் நண்பர்கள் தங்கிருந்த அப்பார்ட்மென்டில்தான் நானும் பிரதாப்பும் ஸ்டே. தினேஷ் மட்டும் பவர் ஹவ்ஸ் அருகே மேன்சனில் தங்க முடிவெடுத்தான். குறிப்பிட்ட எளிமையான காட்சி எப்படி இருக்க வேண்டும் என்று முதலில் முடிவெடுக்க வேண்டும். அதாவது காட்சியில் குறைந்த கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். காட்சிக்கான களம் ப்ரெச்சனை இல்லாமல் எளிமையானதாக இருக்க வேண்டும். கூட்டமில்லாத ரோடு, வீட்டினுள் இப்படியாக. வெளிப்புற படப்பிடிப்பு என்றால் காவல் துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும். அனுமதிக்கு கல்லூரி மாணவனர்களாக இருந்தால் நலம். இல்லையெனில் அதிக பணம் இழக்க நேரிடலாம். அடுத்து காட்சியில் களம் மாற்றம் பெறாமல் இருத்தல் நலம். ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்து விடலாம். அடுத்து நடிக்க போகும் கதாபாத்திரங்களுக்கு முன் நடித்த அனுபவம் இருந்தால் ‘டேக்’ அதிகம் பெறாமல் காட்சியை எடுத்து முடிக்க வசதியாக இருக்கும். மேலும் அவர்களால் கதாபாத்திர தன்மையை எளிதில் புரிந்து கொள்ளமுடியும் அல்லவா. இத்தகைய கட்டுபாடுகளுக்கிடையில் காட்சியும் பார்ப்பவர்கள் ரசிக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்கிற யோசனையுடன் ஒரு காட்சியை தேர்வு செய்தேன். மொத்த திரைகதையில் தனிப்பட்ட காட்சி எதுவும் கதையின் தன்மையை சொல்லும் விதமாக இல்லை. ஒரு காட்சியை மற்றொரு காட்சியுடன் இணைத்துதான் ரசிக்க முடியும் என்பதாகவே இருந்தது. எனவே நான் தேர்வு செய்தது இரண்டு காட்சி. இரண்டு காட்சிக்கும் இரண்டு களம் தேவை. ஒன்று பீச் மற்றொன்று ரெஸ்டாரென்ட் இரண்டும் அருகருகே இருந்தால்தான் காட்சியை ஒரே நாளில் முடிக்க முடியும். எனவே  படப்பிடிப்பிற்கான களமாக பெசென்ட் நகரை தேர்வு செய்தேன்.
அடுத்து கதாபாத்திர தேர்வு. கூத்துப்பட்டறையில் இருந்து ஒரு மாணவனை நாயகனாக தேர்வு செய்தாகியது. அடுத்து நாயகிக்காக பெண் தேட இறங்கினோம் மூவரும். எனக்கு தெரிந்த சினிமா வட்டாரத்திலிருந்து வந்த பதில் எல்லாம் பசங்க எவ்ளோ பேர் வேணாலும் இருக்காங்க ஆனா பீமேல் கிடைக்க மாட்டாங்க என்பதுதான். பிரதாபின் நண்பர் பிரபு ஒரு பெண்ணை சொன்னார். பெண் சன் டிவி யின் அலுவலகத்தில் பணி புரிகிறாள். பெண்ணிடம் பேசி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டோம். நாயகி வீட்டிற்கு நேரில் ஒரு விசிட்டும் செய்து விட்டோம். நாயகன், நாயகி, நண்பர்கள், என அத்தனை பாத்திரங்களும் ரெடி என்கிற நிலையில். கேமரா தயார் செய்யும் நேரத்தில் எலக்சன் நேரம் போலிஸ் பிரெச்சனை இருக்கு. முடியாது தல. கேமரா மாட்டிக்கும் தல. சரி எலக்சன் முடியட்டும் என படப்பிடிப்பை தள்ளிபோட முடிவெடுத்து ஊருக்கு மூவரும் கிளம்பிவிட்டோம்.
எலக்சன் முடிந்த மறுநாளே கேமரா மேன், கேமரா, கதாபாத்திரங்கள் என்று ஒவ்வொருவாராக அழைக்க. நாயகி பெண் கால் அழைப்பை எடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பெண் அவளது ஆண் நண்பன் அழைப்பை எடுத்தார். இந்த இடத்தில் இதை சொல்வது அவசியம் முதன் முதலில் நாயகியிடம் பேசியபோது ஒரு எண் தந்து மேனஜர் நம்பர் அதை தொடர்பு கொள்ளுமாறு சொல்லி இருந்தார். பிரபு விடம் அந்த எண்ணை காட்டியபோது அது அவளது ஆண் நண்பனின் எண் எனவும் பிரபுக்கு நண்பன் எனவும் தெரியவந்தது. பின் வரும் இடங்களில் அவரை நாம் மேனேஜர் ஆகவே பார்க்கலாம் மேனேஜரிடம் பேசியபோது நாயகி பிஸி என்று வரிசையாக தேதியை தள்ளிக்கொண்டே செல்ல நான் மே 1 ஓகே வா? இல்ல பாஸ் அன்னைக்கு ஹாலிடே(உழைப்பாளர் தினம்) அவங்க ஒர்க் பண்ண மாட்டங்க. 2 தேதி ஓகே என்றார். கன்பார்மா? மத்த அரேஞ்ச்மென்ஸ் இருக்கு. கன்பார்ம் ஜி. நானும் சரி என்று மற்ற ஏற்பாடுகளை கவனித்தேன். எதற்கும் முன்னதாக நாயகி நம்பருக்கு நாள் நாள் என காத்திருந்து பேசி. உங்க மேனஜர் 2 தேதி டைம் சொல்லிருக்காரு வந்துடுவீங்களா? என்னைக்கு 2 ஆ.. ஓகே ஓகே அன்னிக்கே வச்சுக்கோங்க. மீண்டும் நாங்கள் மூவரும் சென்னை சேர்ந்தோம்.
முப்பது, ஒன்று என்று நாயகி நம்பரையும்.. மேனேஜர் நம்பரையும் தொடர்பு கொள்ள. மாற்றி மாற்றி ரிங் சப்தம் மட்டும்தான் மிச்சம். எப்பீயில் பேச முயல. அவள் எல்லா மெசேஜ்களையும் படித்தவர் எந்த பதிலும் வரவில்லை. தேதி மே ஒன்று இரவு. பிரபு விடம் பேசியபோது. நீங்க ஷூட்டிங் முதநாளுதான் கால் பண்றீங்கலாம். அவங்க எங்கயோ வெளியூர் போறாங்களாம் மூனு நாள் நாலுநாள் ஆகுமா. அடுத்ததாக நாயகன் வேலூரில் இருந்து இரவு வந்துவிட. அவரை அடுத்த நாள் வரை காத்திருக்க விட்டு வேலூருக்கு திருப்பி அனுப்பினோம். பட்ஜெட் காசெல்லாம் கரைந்தது. இரண்டாம் தேதி இரவு எப்பீ யில் நாயகி பல போடோஸ்களை அப்லோட் செய்ய. அதில் பிறந்த நாள் கேக்கில் புகைபடம் அட்சாகி அதில் நாயகி தோளில் மேனேஜர் கை போட்டபடி காட்சி தந்தார். அடுத்து மேனேஜர் கேக் வெட்டி நாயகிக்கு ஊட்டி விடுவது என்பதை போல போட்டோ என கலை கட்டியது. அதன் பின் நாயகிக்கு எப்போது கால் செய்தாலும் எடுப்பதில்லை.
அடுத்ததாக ஆர்டிஸ்ட் ஏஜென்ட் என்று ஒரு எண்ணிற்கு பேச அவன் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு. ஒரு நாள் பேமென்ட் மட்டும் ஏழாயிரம் என்றான். எல்லாரும் ஐடி ல வேல பாக்றவங்க பாஸ். நீங்க குடுக்குற பேமென்ட் அவங்களுக்கு பாக்கெட் மணிக்கு தான் அதனால குறைச்சிக்க மாட்டங்க பாஸ் என்றபடி டயலாக் இருக்கா எவ்ளோ இருக்கும் என்றார். அப்போ ஏழாயிரம் குடுத்தாலும் டயலாக் பேசமாட்டீங்களா? என்று பயந்து எங்களது பட்ஜெட் மொத்தமே பத்தாயிரம் தான் பாஸ் என்றேன் அவர் பாணியில்.
பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்றால் குறைந்தது ஐயாயிரம் வேண்டும் என்கிற நிலை வந்தது. ஷூட்டிங் தள்ளிப்போக இந்நிலையில் பட்ஜெட் பணம் குறைந்து கொண்டிருந்தது. இறுதியாக சினிமாவில் அட்மாஸ்பியர் அர்டிஸ்ட் ஏஜென்ட் ஒருவரை பிடித்து ஒரு பெண்ணை ஷூட்டிங்கில் நேரடியாக சென்று பார்த்து எங்களது ஷூட்டிங்கிற்கு தேதி முடிவெடுத்தோம். குறிப்பிட்ட தேதி வருவதற்குள் ஏஜென்ட் இரண்டாயிரத்திலிருந்து இரண்டாயிரத்தி ஐந்நூறு ரூபாய் குடுக்க வேண்டும். பெண்ணிற்கு இரண்டாயிரம் எனக்கு ஐந்நூறு என்றார். வேறு வழியின்றி நாங்களும் ஒத்துகொண்டோம். மே ஆறு சூட் என்று முடிவானோம். ஆனால் ஐந்தாம் தேதிதான் வந்தது பிரெச்சனை. பெண் நாலாயிரம் வேண்டும் என்று கூறுவதாக சொல்ல. நாங்கள் மத்த அரேன்ஜ் செய்த இடங்களில் மீண்டும் வீணாக பணம் அழுக வேண்டுமோ என பயந்து அந்த பெண்ணிற்கு கால் செய்ய அவள் எடுக்கவில்லை. இப்படியாக போனால் மொத்த பணமும் தீர்ந்து மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும்தான் என்று ஏஜென்ட்டிடம் வேறு யாரும் பார்க்க முடியுமா பழைய ரேட்டுக்கே பாருங்க என்று கேட்க. அவரும் ஒரு பெண்ணை நேராக சந்திக்கலாம் என்று வள்ளுவர் கோட்டம் வரசொன்னார். அங்கு போன நாங்கள் அப்போது தான் முதன் முதலாக ஏஜென்டை  சந்தித்தோம். கையில் ஹேன்ட் பேக்குடன் வாயில் பான்பராக் போட்டுகொண்டு அருகில் குண்டான பெண் ஒருத்தியுடன் நின்று இவங்க தான் ஓகே வா என்று கேட்க. பிரதாப் நானும்  யோசித்து சொல்றோம் என்று அங்கிருந்து நகர்ந்து டீ கடையில் நின்று சிரித்து கொண்டோம். சரி நாளைக்கு ஷூட்டிங் கிடையாது இப்போ என்ன பண்றது என்றபடி யோசித்து கொண்டிருந்த நிலையில். முன்பு ஏஜென்ட் மூலமாக பார்த்த பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது. கால் பண்ணிருந்தீங்களா சூட்ல இருந்தேன் சொல்லுங்க. ஏங்க நாளைக்கு உங்களால பண்ண முடியாதா? இல்லங்க எனக்கு நிறைய செலவு இருக்கு. பாமிலியே இதுலதான் நான் ரன் பண்ணனும். ஆயிரத்தி இரனூறுலாம் பத்தாது... என்னது நாங்க உங்களுக்கு இரண்டாயிரத்தி ஐந்நூறுல பேசுனோம். பாத்தீங்களா அவர நீங்க ரொம்ப கஷ்டபடுறீங்க பைக் இல்லாம பஸ்ல தான் வரீங்க! அப்படி இப்படின்னு சொன்னாரு என் பிரெண்ட்ஸ்லாம் ஏன் இவ்ளோ கம்மியா வாங்குற. இரண்டாயிரம் கேளுனு சொல்றாங்க. எல்லா ஏஜென்ட்டும் கமிசன் பாப்பாங்க ஆனா இவர மாதிரி யாரும் ஏமாத்த மட்டங்க என்று அந்த பெண் புலம்பி தள்ளினால். சரி விடுங்க நாங்க அவர்ட பேசுன ரேட் தரோம் சூட் வரீங்களா? வரேன். உங்க கூட யாரும் ஹெல்ப்க்கு வருவாங்களா? ம்ம்.. என்னோட லவர் வருவாரு. அவருக்கு நாங்க ஏதும் தரணுமா!. நான் என் லவ்வர கூட்டிட்டு வரதுக்கு ஏன் நீங்க தரீங்க.. அய்யோ உங்களுக்கு இன்டஸ்டரி பத்தி தெரில இப்படிலாம் இருந்தீங்கனா உங்கள ஈசியா ஏமாத்திடுவாங்க. நானும் இப்படித்தான் இருந்தேன் இப்பதான் எதோ தெளிவா இருக்கேன். சரி ஷூட்டிங் வந்துடுங்க மறக்காம. நீங்க நைட் ஒருதட போன் பண்ணி கன்பார்ம் பண்ணிடுங்க சரியா?

எழுத்து

Gt. சத்யா 

Sunday, May 4, 2014

# யோர்லாண்ட் - சிறுகதை

யோர்லாண்ட்
யோர்லாண்ட் கடலும் காடும் கொண்ட தீவு. சுற்றி உள்ள சிறு தீவுகளை காட்டிலும் யோர்லாண்ட்டின் நில பரப்பு அதிகம் எனவே மக்கள் இங்கு அதிகமாக வசித்தனர். முழங்கால் நீளம் கொண்ட காக்கி பேண்ட்டும் பெரும்பான்மையாக வெள்ளை மற்றும் மஞ்சள் நிற அரைக்கை முனை கிழிந்த சட்டையும் இடையில் சட்டைக்கு மேலாக தடிமனான கயிரினாலும் கட்டியபடி இருந்தனர் அப்பகுதி மக்கள். பவிங்க்ஸ் மீனை உண்ண யோர்லாண்டின் கடலை சுற்றி கொண்டிருந்தது. ஜெகானா புணர்ச்சிக்காக இருபத்தி எட்டாவது ஆண் இணையை தேடிகொண்டிருந்தது. பெலிகன் ஒன்று ஐந்து பவுண்டிற்கு பற்றாமையால் உண்ண மீனை தேடியபடி வட்டமிட்டது. யோர்லாண்டின் குரங்கு கூட்டங்கள் மரம் தாவி செர்ரி பழங்களை பறிக்க துவங்க அவை சிதறி நீரோடைக்குள் விழுந்து மீனுக்கு உணவாகியது. பாழடைந்த அந்த கடலோர பள்ளி ஒன்று ஏனோ நிமிசப்தமாக இருக்க அவ்வப்போது சிறுவர்கள் சிலரின் குரல்கள் மட்டும் மாறி மாறி எழுந்து கொண்டிருந்தது. சப்தம் அந்தப்பக்கமாக காலை உணவுக்காக மீன்களை தேடி அலைந்து கொண்டிருந்த மனிதனின் காதில் விழுந்தது. சிறிது நேரம் வார்த்தைகளை கவனிக்க தொடங்கியவன் மீண்டும் தனது வேலையை கவனிக்க சென்று விட்டான்(அவன் பல நூறு வருடங்களுக்கு பின் முதுமையை எட்டியவன்). சிறுவர்கள் பேசிகொண்டதில் கொச்சை வார்த்தைகளும் கலந்திருந்தன(ஆனால் அவர்களுக்கு பயன்பாட்டு வார்த்தை தான்). யோர்லாண்டில் முற்றிலும் சிறுவர்களே அதிகம்(இதுவரையில் 200 ஐ தாண்டி உயரவில்லை) முதியவர்கள் ஏழு பேர்களே இருந்தனர். சிறுவர் பருவத்தை கடந்த அனைவருமே முதியவர்கள் என்று தான் அழைக்கப்பட்ட்டார்கள் அங்கே. அவர்களின் சராசரி ஆயுட்காலமே முன்னுரை தாண்டியது. அவர்களில் மூவர் பள்ளி ஒன்றை நிறுவகித்தனர் அங்கு உணவுக்காக உயிரினங்களை வேட்டையாடுவதும், சமைக்கும் முறைகளும் அந்த மூவரால் பல சிறுவர்களுக்கு சொல்லி கொடுக்க பட்டன. மற்ற முதியவரில் சிலர் கடல் உயிரனங்களை பிடித்து வந்து அவற்றின் இனப்பெருக்கத்திற்கு வழிவகைகள் செய்து மீண்டும் கடலில் சென்று விட்டுவந்தனர். அந்த முறையினை அவர்களும் பல சிறுவர்களுக்கு சொல்லிகொடுத்து வந்தனர். அதில் கீத்தன் என்பவனின் அப்பாவும் ஒருவர். யோர்லாண்ட்டில் எந்த சிறுவர்களுக்கும் தங்கள் பிறப்பிற்கு காரணமான தாய் தந்தை யார் என்று தெரியாது வளர்த்தவர்களையே அவ்வாறாக கொள்வர் கீத்தனின் அப்பா அறிய மீன்களை(எண்ணிக்கை விகிதம் குறையும் மீன்கள்) இன விருத்திக்காக பிடித்து வந்து மீண்டும் கடலிலே விடும் பணியை செய்துவந்தார். மக்கள் அனைவருக்கும் கடல் உணவுகளின் மேல் அதிக விருப்பங்கள் இருந்தது அதுவே அவர்களின் பெரும்பான்மையான விருப்பமான உணவு. அதற்காகவே நாளின் பெரும் பகுதியை செலவிடுவார்கள். அடுத்ததாக இருந்தது மது. நடனமும் மதுவும் கொண்ட கொண்டாட்டங்கள் நிறைந்தது அவர்களின் இரவுகள். முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறுவர்களாகவே தோற்றம் தந்த அவர்கள் அதி தீவிர சாகசங்களை புரிபவர்கள். பன மரங்களின் உச்சி வரை சென்று நிலப்பகுதியை சுற்றி பார்த்து வனங்களின் விலங்குகளை வேட்டையாட திட்டமிடுவார்கள் பின் கிடைத்த உணவுகளை சமைக்க அவர்களின் தேர்ந்த பழமை முறைகளை கையாண்டார்கள். தத்தமது தேவைக்கேற்ப அவர்களுக்கு மது தயாரிக்கவும்(சைமன் என்பன் இதில் தேர்ந்தவன். இவனை பின்னர் பார்க்கலாம்) தெரிந்து வைத்திருந்தனர். அப்போது வகுப்பிற்குள் கீத்தன், தமிம், சார்லி, சைமன் என்ற நான்கு நபர்கள் மட்டுமே இருந்தனர். பள்ளியில் மற்ற சிறுவர்கள் யாரும் இல்லை. இதுபோல் இது வரை நடந்ததில்லை என அவர்களுள் கீத்தன் யோசித்து கொண்டிருந்தான். சைமன் என்பவன் ஆப்சென்த்(மது வகை) தயார்த்து பள்ளி முடிந்ததும் விற்பவன். யோர்லாண்டில் சைமனய் விடவும் யாரும் அவ்வளவு சிறப்பாக ஆப்சென்த் தயார்ப்பதில்லை. சைமன் நல்ல லாபம்(யோர்லாண்ட் நாணயங்கள் கடலில் இருந்து பெறபட்ட முத்துக்களை கொண்டு செய்யப்பட்டன)பார்த்தான். அவன் ஆப்சென்த் தயாரிக்க லைகஸ் சோகித் என்பவரிடம் கற்றுகொண்டான். சைமன் லைகஸுடன் முழுக்க முழுக்க அதற்காக என்றே ஐந்து வருடங்களை செலவிட்டான். கலவை விகிதம் கச்சிதமாக இருக்க வேண்டும் அப்போது தான் தனித்தன்மை வாய்ந்த ருசி கிடைக்கும் என்பது அவனுக்கு தெரியும். தற்போது லைகஸ் உயிருடன் இல்லை. ஆதலால் சைமனை தவிற யாருக்கும் அவ்வளவு ருசிமிக்க ஆப்சென்த் தயாரிக்க வலி இல்லாமல் போனது. சாம்ரட் என்பது தான் அவனது நிஜ பெயர். சைமன் என்று மாற்றி கொண்டான். அதை ஏன் மாற்றிகொண்டான் சைமன் என்றால் என்ன அர்த்தம்? என்பது யோர்லாண்டில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இரவு பொழுதுகளில் ஆப்சென்த் விற்பதும் அவனும் குடித்து கொண்டிருப்பது வழக்கமாக இருந்தது. சில நேரங்களில் கீத்தன், சார்லி இருவரும் அங்கு வருவதுண்டு. அப்படி வந்தால் அவர்களுக்கும் ஆப்சென்த் இலவசமாக கிடைக்கும் குடித்துவிட்டு இரவு பொழுதை முழுவதுமாய் யோர்லாண்டின் கடற்கரை ஓரமாக பெண்களுடன் கழிப்பார்கள். அவர்களில் லிசியா என்ற பெண்ணை சைமன் காதலித்து வந்தான். யோர்லாண்டின் மையத்தில் அமைந்த காட்டில் பெண்கள் கூட்டத்துடன் வசித்தாள் அவள். சைமனின் மதுவை குடிக்க கடலோர பகுதிக்கு வருபவள் லிசியா. பலமுறை அதன் தரத்தினில் வியந்து சைமனய் புகழ்ந்திருக்கிறாள். முதலில் லிசியா விடம் காதலை சொல்ல சைமன் தயங்கினான் இப்போது இருவரும் காதலிக்க துவங்கி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. தமிம் நத்தைகளை பிடித்து சமைத்து அதை இரவு பொழுதுகளில் விற்று வந்தான் அதனால் சைமனய் சந்திக்க இரவுகளில் அவன் வருவதில்லை. மேலும் அவனது வியாபாரம் மந்தமானதிலிருந்து பெரும் கவலை அவனை வாட்டியெடுத்தது.
கீத்தன், “சைமன், இன்று பள்ளிக்கு யாருமே வரவில்லை. கவனித்தாயா? ஏனென்று உனக்கு தெரியுமா?”
......
தமிம். “முன்பை போல தற்போது நத்தைகள் குறைந்து விட்டன. இன்னம் இரண்டு மாதங்களில் நத்தை வளர்க்கும் முயற்சிக்கான பணியை செய்ய வேண்டும். அதற்கு உங்கள் மூவரின் துணை வேண்டும்” என்றான்.
கீத்தன், “சார்லியும் நானும் தினமும் இனி மாலை உன்னை சந்திக்க வருகிறோம். இருள் சூழும் வரை நத்தைகளை பிடிப்போம். அதன் இன விருத்திக்கான உதவியை எனது தந்தை செய்வார். அவர் தற்போது  அழிந்துவரும் மீன் இனங்களை பிடித்து வளர்த்து வருகிறார்.”
சார்லி, “சைமன், இரவு ஆப்சென்த் அதிகமாக குடித்திருப்பான் என்று நினைக்கிறேன்” என்றபடி சார்லி சைமனய் உலுக்கிகொண்டிருந்தான். வகுப்பில் நால்வர் மட்டுமே இருந்தனர். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஆப்சென்த் அதிகமாக குடிப்பது ஆபத்தானது. மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது என்பது மூவருக்கும் தெரியும். மேலும் தூங்கினால் விபரீதமாக ஏதும் நிகழலாம் என அவர்கள் எண்ணினர் அதனால் மூவரும் சைமனை எழுப்பவதற்காக முயன்றனர். ஆனால் சைமனை எழுப்புவது பெரும் போராட்டமாக அமைந்து போனது.
முன்பு ஒரு நாள் சார்லி புகை மீன்களை உண்ண ஆர்வம் காட்டினான். அதற்காக நால்வரும் ஒரு பெரிய பீப்பாய் தேடி அலைந்தனர். அப்போது லிசியா அதை தந்து உதவினாள். அதனால் நால்வரும் லிசியாவையும் அழைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று மேலும் லிசியாவும் தனது தோழிகளுடன் அங்கு வந்துவிட்டாள். புகை மீன்கள் சமைக்க ஆயத்தம் ஆனார்கள் ஆனால் சைமன் திட்டமிட்டிருந்தது ஆண்களுக்கு மட்டும் தான். நெருப்பு மூட்டப்பட்டன. பீப்பாய்க்குள் நெருப்பு துண்டுகள் போடப்பட்டு தலை வெட்டிய மீன்கள் கொக்கிகளில் மாட்டப்பட்டன பின் கோணிகள் போட்டு மூடப்பட்டன. சைமன் ஆப்சென்த் கொண்டுவந்திருந்தான். அனைவரும் அதை குடித்து... இரவு ஆரம்பம் ஆக இருந்தது. புகையில் மீன்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருக்க வேண்டும். காத்திருந்தனர். லிசியாவும் சைமனும் ஒட்டிய பாறைகள் இரண்டின் இடை குகைக்குள் நெருப்பை மூட்டி அதன் உஷ்ணத்தில் புணர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் உடலின் ஸ்பரிசத்திலும் ஆப்சென்த் தந்த மயக்கத்திலும் நிலை மறந்திருந்தனர். மற்றவர்களும்  கடலுக்குள் சென்று நீந்தி கொண்டும். கரையில் ஏற்றிவைத்த நெருப்பில் ஈர உடலை உலர்த்தியபடி பொழுது கழித்தனர். அப்போது மீன்களின் வாடையில் அங்கு குரங்கு கூட்டங்கள் வந்துவிட்டன. ஆனால் அவைகளுக்கு நெருப்பை நிறுத்துவதற்கு தெரியவில்லை. மேலும் ஆவி பலமாக இருந்து குரங்குகளின் கைகளை சுட்டது. கடலில் இருந்து கீத்தன் மேல் கரைக்கு வந்த போது அங்கு குரங்குகள் நிற்பதை கண்டு அரைகுறையாக வெந்த புகை மீன்களை எடுத்து அவைகளுக்கு போட்டான். அப்போது அங்கு வந்த சைமன் “இருக்கும் மீன்கள் ஏற்கனவே போதவில்லை” என்றும் “அதை குரங்குளுக்கு ஏன் போட்டாய்?” என்றும் கீத்தனிடம் சண்டையிட்டான். அதை கண்ட லிசியா தான் தன் தோழிகளை அழைத்து வந்ததில் சைமன் வெறுப்புற்றுள்ளான் அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று எண்ணி அங்கிருந்து தன் தோழிகளுடன் புறப்பட்டாள். இதனால் மனம் வருந்திய சைமன் மன்னிப்பு கேட்டான். ஆனால் லிசியாவின் கோபம் தனிவதாக இல்லை. புறப்பட்டாள் லிசியா.   
பிறகு கீத்தன் குரங்குகளுக்கும் தனக்குமான உறவை சொன்னான்: “சைமன், குரங்குகளை நான் நேசிக்கிறேன். அவைகளை நான் புனிதமாக எண்ணுகிறேன். எனது மூதாதையர்கள் கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டபோது. அந்த கப்பலில் இருந்த குரங்குகளே அவர்களை காப்பாற்றியது. அப்போது இருந்த குரங்குகள். ஆயுதங்கள் ஏந்தி சண்டை போடவும் அறிந்திருந்தனர். மனிதர்களையே கொன்று நீருக்குள் வீழ்த்தியது என்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நம் யோர்லாண்டின் அதன் சந்ததியின் பின்பு வந்த குரங்குகளிடம் அந்த பண்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. குரங்குகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்று மனிதர்களே அதனை அழிக்க தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்று யோர்லாண்டின் செல்வந்தர் அரசர்கள் இருவரின் வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் அடிமைகளாக இருக்கின்றன. அவைகள் தினமும் புதிய உணவுகளை புது ருசியுடன் வீட்டினருக்கு சமைத்து தரவேண்டும். உணவு பிடிக்கவில்லை என்றால் அடிமை குரங்குகளின் தலை  வெட்டப்படுகின்றன இவையெல்லாம் உனக்கு தெரியுமா. உனக்கு அதைப்பற்றி எல்லாம் என்ன கவலை.”
.....
“அதனால் எங்கள் கூட்டத் தந்தை குரங்குகளின் கதைகளை சொல்லி எங்களை வளர்த்தார். நாங்கள் குரங்குகளை நேசிக்க கற்றுக்கொண்டுதான் வளர்க்கப்பட்டோம்” என்று சொல்லிமுடித்தான். சைமன் கீத்தனும் பழையப்படி நட்பில் தொடர்ந்தனர். லிசியாவோ சைமன் மீது கோபமாகவே இருந்தாள்.
யோர்லாண்டின் குரங்குகள் பற்றி சிறுவர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் உள்ளது. அது குரங்கினங்களின் ஒரு சில குழுக்கள் வனங்களில் பிரிந்து ஆயுத பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. சாகில், ப்ளுட்டோ என்ற இரு செல்வந்தர்களின் வீட்டிலும் அடிமை பட்டு கிடக்கும் குரங்குகளை மீட்டு செல்வந்தர்கள் இருவரையும் கொன்று வீழ்த்துவதே அவர்களது திட்டம். அதற்காக பெரும் நேரம் வாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் ஏனெனின் பல மனிதர்களை அவர்கள் கொல்லவேண்டும். கடலோர குரங்குகளே அவர்களுக்கு உணவு கொண்டு தந்து உதவிவந்தன.
பின் ஒரு பள்ளி விடுமுறை நாளின் போது சைமன் சிப்பிகளை கொண்டு பரிசு செய்து லிசியாவிற்கு தோழி மூலம் அனுப்பி வைத்தான். அதில் சர்பிங் செல்ல வருமாறும் அவள் பிரிவினால் வருந்துவதாகவும் யோர்லாண்டின் குறியீட்டு மொழியில் எழுதி இருந்தான். ஆனால் சைமன் எதிர்பார்த்ததுபோல லிசியாவிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. அன்றிலிருந்து சைமன் ‘ஆப்சென்த்’ அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்கிருந்தான். அவனது நண்பரகள் தடுத்தும் கேட்பதாக இல்லை. பின் சைமனின் மாறுதலுக்காக கடலின் நடுவே இருக்கும் அறநூறு மீட்டர் நீளம் கொண்ட  சிறு தீவுக்கு படகு ஒன்றிற்கு நால்வரும் சென்றனர் அங்கு கிடைத்த ஆமைகளையும் நண்டுகளையும் பறவைகளையும் வேட்டையாடி சமைத்து உண்டனர். அப்போது தமிம் ஆமைகளை வறுத்து அதில் தேனும் பேசில் பூக்களையும் போட்டு விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என திட்டமிட்டான். நாட்கள் சென்றதும் அதை நிறைவேற்றி லாபம் பார்த்தான். சைமன் லிசியவிற்காக காத்திருந்தது தொடர்ந்தது... லிசியாவின் பகுதி ஆண்கள் செல்ல அனுமதிக்க படாததால் சைமனால் அங்கு செல்ல இயலவில்லை மேலும் அவளும் கடலோர சந்தைக்கு வருவதில்லை. நாட்கள் செல்ல செல்ல லிசியா ஏனோ வரவில்லை. யாருமற்ற பள்ளிக்குள் இருந்த நண்பர்களில் சார்லி சைமனிடம் சொன்னான் “லிசியா நம் பள்ளியில்தான் இருக்கிறாள் ஜன்னலில் தெரிகிறாள் பார்” என்றான். மேலும் “அவள் உன்னை காதலிப்பதாக சொல்கிறாள்” என்று மயக்கத்தில் இருந்த சைமனிடம் சொன்னான். சைமன் திடுக்கிட்டு எழுந்தான். மூவருக்கும் ஆச்சரியம் மிகுந்தது. ‘யோர்லாண்டில் பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்க படவில்லை பின் எப்படி லிசியா இங்கு வந்திருப்பாள்’ எண்ணியபடி ஜன்னலை நோக்கி சென்றான் சைமன். அங்கு லிசியா தெரிந்தாள். அவள் செய்திருந்த முக அலங்காரம் பார்பதற்கு மிகுதியாக ஒரு வேசியை போல இருப்பதாக அவன் நினைத்தான். மற்ற மூவருக்கும் ஆச்சரியம். அங்கு லிசியா என்ன? எந்த பெண்ணுமே இல்லை. பொய்யாக பேசிய வார்த்தையிலிருந்து இவனுக்கு எப்படி லிசியாவின் பிப்பம் தெரிகிறது என்று. கீத்தன் “ஆப்சென்த் பின் விளைவாக இருக்கலாம்” என்று புலம்பினான். சைமன் யாரும் எதிர் பார்க்காத வகையில் திடீரென்று “லிசியா என்னை காதலிப்பதாக கூறுகிறாள் பார்” என்று கூறியபடி துள்ளிக்குதித்தான். நண்பர்கள் மனதில் திகில் படர்ந்தது. படித்து கொண்டிருக்கும் வாசகர்கள் பள்ளியைவிட்டு சற்று வெளியே வரவேண்டும்.  
யோர்லாண்ட் பகுதி கடலுக்குள் மூழ்கக்கூடும் என்று வான சாஸ்திரம் கூறக்கூடிய ஜெனோம்(மா முதியவர்) கூறிய எச்சரிக்கையை கேட்டு மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள மேடான வனங்களுக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். இதை கண்ட வனங்களில் இருந்த குரங்கு கூட்டங்கள் வனமே ஒடுங்கும் அளவில் அலற தொடங்கியது. அப்போது யாரும் அற்ற அந்த கடலோர பள்ளிக்குள் சைமனும் மற்ற மூன்று நண்பர்கள் மட்டும் இருந்தனர்.
                                                                   
எழுத்து

GT. சத்யா  

Saturday, April 19, 2014

#முற்றும்

கல்ப் கிக் கதைகள் (3)
#முற்றும்

கிக் மெயிலில் தனது முன்னால் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்பி இருந்தான்
இரண்டுநாட்கள் கழித்து அதற்கு ஆங்கில நன்றி வந்திருந்தது... தொடர்ந்து எப்படி உனக்கு என் பிறந்தநாள் நியாபகம் இருக்கிறது. என்ற ஒரு வாக்கியமும் வந்திருந்தது. அதற்கு கிக் நான் என்றும் உன் பிறந்தநாளை மறந்ததில்லை என்று பதில் அனுப்பி இதற்கு பதில் வர இன்னம் இரண்டு நாட்களாகும் என்று நினைத்து கொண்டான்.

ஜெர்மன் பெண்களுக்கு தமிழ் தெரிந்ததனால் மொழி பிரெச்சனை இன்றி கல்ப் அதில் ஒரு பெண்ணிடம் ஒரு வார காலமாக பேசிவருகிறான். அப்பெண் தனது பெயர் சொல்ல மறுத்ததால் கதாபாத்திர பெயர் இல்லை. மன்னிக்கவும்.

கல்ப் ஐ அழைத்த அந்த பெண்

“ஏய்... நாம பேசுற விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சிடிச்சி. நீ யாருன்னு கேட்டாங்க”

“எப்படி தெரிஞ்சிச்சு”

“பேஸ் புக்குல முன்னாடி வந்த இரண்டு கதையையும் என் அப்பா படிச்சிட்டார்”

“வாய்ப்பே இல்ல. இந்த எழுத்தாளன் எழுதுறத யாருமே படிக்கிறதில்லை கத விடாத படிக்கிறது வீரமணி, விக்கி தாஸ், தர்மராஜ், எப்போதாவது ரவி மத்தபடி சில பேருக்கு எழுத்தாளனே பர்சனல் மெசஜ் அனுப்பி ‘படித்து சொல்லவும்’ என்று தொந்தரவு பண்ணி படிக்க வைக்கிறான்”

“இல்ல அவங்கள தவிற சில பேரும் தொடர்ந்து படிக்கிறாங்க அதுல என் அப்பாவும் ஒருத்தர். அவர் ஒரு இலக்கிய வாசகர்(அட டே!)”

“அதான் எழுத்தாளன் எல்லாம் கற்பனைன்னு சொல்லிடுறானே அப்புறம் என்ன பிரெச்சனை வர...”

“இது மாதிரி காதல்ன்னு பிரண்ட்ஸ்னு ஒருபொண்ணு ஆம்பள கூட பேசுறது பழகுறது எல்லாத்தையுமே இங்க அசிங்கமா பாக்குறாங்க பேசுறாங்க.. என்னபண்றது”

“யாரு எப்படி பேசுனா என்ன?”

“உனக்கு பிரெச்சன இல்ல அப்பாவே பேசுறாங்க... வேணாம் இந்த எழுத்தாளன் சொல்ற மாதிரி எல்லாம் கற்பனையாவே இருக்கட்டுமே”

“எல்லாத்தையும் கற்பனை ஆக்குறதுல எனக்கு எந்த ப்ரெச்சனையும் இல்ல... எதுவா இருந்தாலும் ஒரு பத்து நிமிஷம் யோசிச்சு சொல்லு”

“இல்ல... எல்லாம் கற்பனைதான்”

“இல்ல நான் போன கட் பண்றேன்.. பத்து நிமிஷம் கழிச்சி கால் பண்றேன்.. நல்லா யோசிச்சு சொல்லு”

என்று கட் செய்தான் கல்ப்..

அதற்குள் கிக் அழைத்து பேசினான்..

“டேய்‘பிறந்தநாள் வாழ்த்து’ அனுப்புனேன் டா அவ தேங்க்ஸ் னு ரிப்ளே பண்ணிருக்காடா.”

“நீயாது நல்லாரு... நான் சொன்ன மாதரியே அனுப்புனியா?”

“ஆமாம் டா ஒரு கவித யோட அனுப்புனேன்.”

“எனக்கென்னமோ சந்தேகமா இருக்குடா இந்த எழுத்தாளன் வேற எல்லாமே கற்பனைன்னு சொல்லிட்டான். உனக்கு வந்த மெயில செக் பண்ணி பாரு”

“என்ன டா சொல்ற எல்லாமே கற்பனையா?”

“நீ விஷ் பண்ணிருப்ப அங்கேந்து எந்த பதிலுமே வந்துருக்காது.. அதாநிஜம்”

“அப்படியா.. நான் உடனே செக் பண்ணி பாக்குறேன் இதுக்கு தான் இந்த எழுத்தாளர்களையே நம்பக்கூடாது எல்லாத்தையும் பண்ணிட்டு கடைசியா எல்லாம் கற்பனை புனைவுனு சொல்லிடுவாங்க”

பத்து நிமிடம் கழிந்து விட்டதால் கல்ப் மீண்டும் அந்த பெண்ணை அழைத்தான்.

“ஹலோ.. நான்தான்பேசுறேன்.. யோசிச்சியா என்ன முடிவு பண்ணிருக்க?”

“ஹலோ... யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”

Sunday, March 9, 2014

மா மனிதர்கள்



கல்ப் கிக் கதைகள் (2)
மா மனிதர்கள் - குறுங்கதை
                                 
எப்போதும் எப்பி ஆன்லைனிலேயே பலியாய் கிடக்கும் கிக். மூன்று நாட்களுக்கு முன்னதாக எப்' பியில் தனக்கு வந்த ஒரு முன் தெரிந்திராத பிரெண்ட் ரிகுஸ்ட்டினை கன்பர்ம் குடுத்து உள் சென்று பார்த்த போது அந்த ஆண் நண்பனுக்கு ஏகபட்ட பெண் தோழிகள் இருந்தனர்.கிக் ஆர்வமிகுதியில் ஒட்டு மொத்த பெண்களுக்கும் ரிகுஸ்ட் அனுப்ப முயன்றதால்... கிக் கின் அக்குவன்ட் தற்காலியமாக க்ளோஸ் செய்ய பட்டுவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல் கட்டிலில் குப்புற படுத்து கிடந்து “என்ன பண்ணலாம்” யோசித்தபடி இருந்தான்.

அப்போது அவனை கல்ப் மொபைலில் அழைத்து லவர்ஸ் டே அன்று பார்த்த இரண்டு பெண்களை பார்த்ததாகவும் அருகில் இருப்பதாகவும் அழைத்தான். உடனே கிக் அழைத்த இடத்திருக்கு சென்றான்.

கல்ப் கிக் இருவரும் அந்த இரு பெண்களை பின் தொடர்ந்தனர்...

கல்ப், “டேய்... நாம அன்னைக்கு பார்த்தபையும் இன்னைக்கும் சரி ரெண்டு பெரும் கேப் விடாம பேசிகிட்டே இருக்கங்களே எப்படிடா? அதுவும் இங்கிலீஸ் ல”

கிக் “நான் விசாரிச்சேன்... ரெண்டு பேருமே ஜெர்மன் ரிட்டன்ஸ் ஆ...”

“அப்போ ஜெர்மன்ல எல்லாரும் இப்படிதான் வாய் வலிக்காம பேசிகிட்டே இருப்பாங்களா”

“அது தெரியல... ஜெர்மன் என்ன லாங்குவேஜ் பேசுவாங்க.. ஜெர்மன்னு ஒரு லாங்குவேஜ் இருக்குல...”

கல்ப் பதில் தெரியாமல் முழித்தான்..

“இல்லையா?” என்றான் கிக்..

டேய் “வெள்ள காரங்க எல்லாருமே இங்கிலீஷ் தான் பேசுவாங்க”

“அப்படியா... எல்லா தெரிஞ்ச மாதிரி கத விடாதடா”

“நிஜமாடா.. சரி ப்ரச்சன வேண்டாம்.. அந்த பொண்ணுங்கள்டயே கேட்டுடுவோம்.. என்ன?”

“அய்யய்யோ... எங்கடா ரெண்டு பேரையும் காணும்”

“அந்த கோயில் குள்ள போயிட்டாங்கடா”

கோயிலுக்குள் கூட்டம் அலை மோதியது....

“அவங்க வெளில வரட்டும் பேசிடுவோம்... ஏன் அவங்கள யே நம்மல்ட பேசவச்சா எப்படி?” என கண்ணடித்தான் கல்ப்.

“எப்படி டா?”

“அவங்க வெளில கிழட்டி போட்ட செருப்ப தூக்கிவேற இடத்துல வச்சிடுவோம். அவங்க வந்து கேட்பாங்க நாய் இந்த பக்கமா தூக்கிட்டு போச்சுனு சொல்லுவோம் என்ன?”

“ரொம்ப சில்லியா இருக்குடா.. நம்மல மாதிரி மா மனிதர்கள் இப்படி பண்ணா நல்லாருக்காது.. சரி அது இருக்கட்டும் அவங்க என்ன உன்கிட்ட வந்து தமிழ் ல கேட்பாங்களா... உனக்கு தமிழ தவிற ஒன்னும் தெரியாது... சரி நமக்கு”

“டேய்.. இங்கிலிஸ் ல பேசுவேண்டா”

கிக் கேலியாக சிரித்து கொண்டு “எங்க... ஒரு நாலு வார்த்த இங்க்லீஷ் ல எழுது பாப்போம்” என்று ஒரு காகிதத்தை பேனாவுடன் கொடுத்தான்

“நாலென்ன ஐஞ்சு வார்த்த எழுதுறேன் பார்” என்று அதை வாங்கிய கல்ப்

ஐந்து வார்த்தை எழுத அந்த காகிதத்தை கொண்டு சென்று பெண்களின் செருப்புகளின் அருகில் வைத்துவிட்டு இருவரும் ஓடி மறைந்தனர்...

அதில் இருந்த ஐந்து வார்த்தை கீழே
.
.
.
.
.

German slippers for free sale